தமிழ்

யார் தமிழன்?
தீபாவளி தமிழர் விழாவா?


இப்பிரபஞ்சத்தில் நீரில் தோன்றிய உயிரினம் பரிணாம வளர்ச்சிப் படிகளைத் தாண்டி மண்ணில் மனிதனாகத் தடம் பதித்த காலம் முதல் இன்றைய கண்ணி யுகத்திற்கு இடைப்பட்ட மனித நாகரிக வளர்ச்சிப் படிமுறையின் நீண்ட வரலாற்றுப் பக்கங்களில் நம் மூதாதையர்களை அரக்கர்கள், குரங்குகள் எனக் கொன்று குவித்த நிகழ்வுகள் தொடர்கதையாகிவிட்டன.

அந்தவகையில் தான் ஆதியில் தோன்றிய மனிதன் நாகரிக வளர்ச்சியடைந்து வருகின்ற போது அவனது தேவைகள் அதிகமாகத் தொடங்கின அவ்வாறு அதிகமாகின்ற வேளையில் அந்தத் தேவைகளை அவன் வாழும் சூழலில் பூர்த்தி செய்யமுடியாமல் போகவும், காலநிலை இடம் கொடுக்காது போகவும், அவன் தான் இருந்த இடத்தை விட்டு வேறு பிரதேசத்திற்கு அல்லது கண்டங்களுக்கு தொடர்ச்சியாக இடம்பெயரத் தொடங்கினான்.

தென்னிந்தியத் தீபகர்ப்பத்திற்கு புதிய மனிதன் முதலில் ஆபிரிக்காக் கண்டத்திலிந்தே வந்து சேர்ந்தான். இவன் ஆபிரிக்காவை விட்டுப் புறப்பட்ட காலம் இற்றைக்கு 85,000 ஆண்டுகள் முன்பு எனக் கணிக்கப்படுகிறது. இம் மனிதர்களின் இன்றைய வம்சாவழியினர் தென்னிந்தியாவின் நீலகிரி மலைச்சாரலிலும், கிழக்கிந்தியப் பகுதிகளிலும் வாழும் மலைச்சாதி மக்களாவார்கள். இலங்கையில் வாழும் வேடர்களும் இவர்களின் வம்சா வழியினரே. இவர்களைக் குறிக்கும் மரபணுக் குறியீடு M2 ஆகும்.

இதற்குப் பின்னர் இரு பெரிய மனிதப் புலப்பெயர்வுகள் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இன்றைய ஈரான் வழியாக இந்தியாவுக்கு நிகழ்ந்திருக்கின்றது. இது இற்றைக்கு 30,000 ஆண்டுகள் முன்பும், 10.000 ஆண்டுகள் முன்பும் நிகழ்ந்திருக்கின்றது என்பது தொல்மரபியல் மூலம் இன்று நிரூபணமாகின்றது.

இவர்களே இன்றைய திராவிட இனத்தவர்களாவார்கள். இவர்களைக் அடையாளப்படுத்தும் மரபுக் குறியீடு M20 ஆகும்.(Spencer Walls : The Journey of Man (new York) 2002) இதன் பின்னர் இ.மு 4000 – 3500 ஆண்டுக் காலத்தில் இந்தோ – ஆரியர்கள் இந்தியாவை வந்தடைந்தனர். இவர்களைக் குறிக்கும் மரபணுக் குறியீடு M 17 ஆகும்.

ஆகவே இவ்வாறு காலத்துக்குக் காலம் மனிதன் கண்டங்கள் தாண்டிப் புலம் பெயர்ந்தான். அந்த வகையில் தான் எம் ஆதிக்குடிகள் என்று சொல்லக் கூடிய ஒஸ்திரலோயிட் மக்கள் (இவர்கள் பேசிய மொழி முண்டா என அழைக்கப்படுகின்றது. இலங்கை என்பதற்கு முண்டா மொழியில் தான் தீவு என் அர்த்தப்படுகின்றது) ஆபிரிக்காக் கண்டத்திலிருந்து இந்தியா நோக்கி இற்றைக்கு 85,000 ஆண்டுகளுக்கு முன் வருகின்றான்.

இவ்வாறு வந்தவன் இலங்கை வழியாக ஒஸ்திரேலியா நோக்கிச் செல்லுகின்றான். இவ்வாறு சென்றவர்களில் சில கூட்டம் கிட்டத்தட்ட 60,000 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் இலங்கை வழியே வந்து இந்தியாவில் குடி பெயருகின்றனர். இந்த இனத்தின் எச்சங்கள் இன்றும் தமிழகம் நீலகிரி மலையிலும் கிழக்கிந்தியப் பகுதிகளிலும் இலங்கையிலும் வாழும் வேடர்களாவார்கள். இதற்கு தொல்லியல் ஆதாரங்கள் பல இருக்கின்றன.

அவ்வாறு வந்து வாழ்ந்த மனித இனம் (ஒஸ்திரலோயிட்) தாய்வழிச் சமூகத்தைச் சார்ந்தவர்களாகவே இருந்தார்கள். இந்த நேரத்தில் தான் கிட்டத்தட்ட இற்றைக்கு 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் ஹைபர், போலன் கணவாய்களினூடாக இந்தியாவின் விந்திய மலைவரை வந்த ஆரியர். அதற்குத் தெற்கே வாழ்ந்த மக்களை அரக்கர்கள், அசுரர்கள், குரங்குகள் என்று அழைத்தனர்.

இதற்குக் காரணம் அவர்களில் அதிகமானவர்கள் வேடுவர்களாகவும், கூட்டுக் குடும்பங்களாகவும் இருந்த்தாகும். அத்துடன் ஆரியர்களது கலாச்சாரமும், குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மக்களின் கலாச்சாரமும் வித்தியாசமாக இருந்தமையாலேயே அவர்களை அசுரர்கள், குரங்குகள் என்றனர் இதுவே உண்மை. இச்சொல் பின்னர் அவர்களை அரக்கர்கள் என அழைக்கக் காரணமாக அமைந்துவிட்டது.


இவ்வாறு எம் மூதாதையர்களான இவர்களை அரக்கர்கள் எனச்சொல்லி அழித்தனர். அதன்பின்னர் தர்மத்தின் யுத்தம் எனச் சொல்லி கதைபுனைந்தனர். இராமாயணம், மகாபாரதர், போன்ற கதைகள் எல்லாம் இவ்வாறு புனையப்பட்டதே ஆகும். அதே போல்த் தான் தீபாவளித்தினத்தைத் கொண்டாடுவதற்கு காரணமாகச் சொல்லப்பட்ட அரக்கன் நரகாசூரன் அழிப்பு, சூரன் அழிப்பு முதலானவை இவைகள் வெறும் பிராமணியம் கட்டிவிட்ட கதைகளே.

ஏன் தமிழை, தமிழ் மண்ணை ஆழமாக நேசித்த ஒரு இனத்தை உயிராக சுவாசித்த மக்களை பயங்கரவாதிகள் என்ற பெயரில் கடந்தவருடம் முள்ளிவாய்க்காலில் அழித்தமை உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நினைக்கின்றேன்.

இதுபோல்த் தான் 18 ஆம் நூற்றாண்டுகளில் நியுஸ்லாந்தைக் கண்டுபிடித்த பிரித்தானியர் அங்கிருந்த ஒஸ்திரலோயிட் இனத்தை குரங்குகள் என அழித்த வரலாற்றை யாரும் மறக்க மாட்டார்கள். அது ஏன் அமெரிக்கா கண்டத்தைக் கண்டுபிடிக்கச் சென்று எல்சல்வடோர் என்ற தீவில் இறங்கிய கொலம்பஸ் கும்பல் அங்கிருந்த செவ்விந்தியர்களை எப்படிக் கற்பழித்துக் கொன்றனர். ஏன் அமெரிக்காவைக் கண்டுபிடித்த அமெரிக்க வெஸ்புஜி என்ன செய்தான். இதை வரலாறு மறக்காது. அது போலதான் இந்த நரகாசுரன் நாடகமும்.

இனி அரக்கர் இனம் இருந்ததா என நோக்குவோம்.

அப்படி அரக்கர் இனம் இலங்கையில், அல்லது இந்தியாவில் இருந்திருக்குமானால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஈமத்தாழிகளிலும், புதைகுழிகளிலும் அவர்களது உடல்களோ அதற்கான ஆதாரங்களோ கண்டுபிடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஏன் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஏதோ ஒரு யுகத்தில் வாழ்ந்துவிட்டு, இன்று உலகில் அடியோடு வழக்கொழிந்து விட்ட உயிரினங்களின் எலும்புக்கூடுகளோ அல்லது எலும்புகளது பாறைப்படிமங்களோ கிடைத்துவிட்டால் அதன் ஊனத்தை வைத்ந்து பூர்வீகத்தையே கண்டுபிடித்துவிடும் அளவுக்கு இன்றைய நவீன விஞ்ஞானத்தால் முடியும். இன்றைய யுகத்திலும் புலுடா விடுகிறார்கள்.

மீசோ சோயிக் யுகம் (Mesozoic Era) எனப்படும் யுகத்தில் (இந்த மீசோ சோயிக் யுகத்தில் டிரையோசிக், ஜூராசிக், கிரிட்டேசியஸ், என்னும் மூன்று காலங்கள் அடங்கும்.) அதாவது இற்றைக்கு 6.5 கோடிகளுக்கு முன் வாழ்ந்த்தாக கருதப்படும் டைனோசர்களின் எச்சங்கள் கூட கண்டுபிடிக்கப்பட்டு 1842 இல் டைனோசர் என்ற இனம் வாழ்ந்ததாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்கு ஆதாரமாக அமைந்தவை அவற்றின் எலும்புக்கூடுகள் அல்ல எலும்புகள் உக்கிய பாறைப் படிமங்கள் தான்.

அப்படி 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் பூர்வீகத்தையே தெளிவாக்க் கண்டறிய முடியும் என்றால். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த்தாக ஆரியர்களால் கூறப்படும் அரக்கர் இனங்களின் எலும்புகளோ அல்லது எலும்புகள் உக்கிய பாறைப்படை எச்சங்களோ இலங்கையின் எப்பாகத்திலும் கண்டுபிடிக்கப்படாத்து ஏன்? ஆறடிக்கு மேற்பட்ட உயரம் உள்ள மனிதனது எச்சங்கள் கூட இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அரக்கர் என்ற இனமே இலங்கையில் இல்லை.

ஏன் ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் என்ற மனித இனம் உருவானது ஆபிரிக்கா, மற்றும் குமரிக்கண்டத்தில் என்றும், அங்கேயே முதலாவது மனித நாகரீகம் உருவானதாகவும் கூறப்படுகின்றது.

ஆதிகாலத்தில் குமரிக்கண்டத்தில் இருந்து இந்தியா, இலங்கை வரை வாழ்ந்த மக்கள் கருமையான தோல் அமைப்பையும், திடகாத்திடமான உடலமைப்பையும் கொண்டிருந்தனர். இவர்கள் தான் நமது மூதாதையர்களான ஆதித் தமிழ்க்குடிகளே.

~~தீபாவளி தமிழர் விழாவா
~ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


ஆனால் தீபாவளியை ஏன் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள் என்பது விளங்கவில்லை. தீபாவளியைப் பற்றி பல கதைகள் உண்டு. வடநாட்டவரைப் பொறுத்தளவில் (குஜராத்திகள், மார்வாரிகள்) தீபாவளி இலக்குமிக்கு உரிய நாள். அவர்களது புத்தாண்டின் தொடக்க நாள். வணிகர்கள் புதுக் கணக்கை அந்த நாளில்தான் தொடங்குகிறார்கள். வங்காளிகள் தீபாவளியை காளி அல்லது துர்க்கைக்குரிய நாளாகக் கொண்டாடுகிறார்கள். இன்னும் சில இனத்தவருக்கு தீபாவளி நாள் இராமன் வனவாசம் முடித்து அயோத்திக்குத் திரும்பிய நாள்.

தமழர்களைப் பொறுத்தளவில் தீபாவளி நாள் நரகாசுரன் என்ற அசுரன் கொல்லப்பட்ட நாள். இது என்கின்றோம். இதைப் பற்றிய புராணக் கதை என்ன சொல்கிறது?

நரகாசுரன் பூமாதேவியின் பிள்ளை. காமரூப நாட்டின் மன்னன். படைப்புக் கடவுளான பிரமாவை நோக்கி கடும் தவம் செய்து பல வரங்களைப் பெறுகிறான். அதன் பின் தேவர்களை அவன் துன்புறுத்துகிறான். துன்பத்தைப் பொறுக்க முடியாத தேவர்கள் வைகுண்டத்தில் திருமாலிடம் சென்று முறையிடுகிறார்கள். திருமால் வழக்கம் போல் தேவர்களைக் காக்க திருவுள்ளம் கொள்கிறார்
.
ஆனால் நரகாசுரனை கொல்வது திருமாலுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. காரணம் நரகாசுரமன் தனது தாயின் கையால் அல்லாது வேறுயாராலும் கொல்ல முடியாதபடி ஏற்கனவே பிரமாவிடம் வரம் வாங்கி விட்டான். உடனே காத்தல் கடவுளான திருமால் பெரிய சதித் திட்டம் தீட்டுகிறார். தனது தேர்ச்சாரதியாக இரண்டாவது மனைவியான சத்தியபாமாவை (பூமாதேவியின் மறுஅவதாரம்) அமர்த்துகிறார். நரகாசுரனோடு நடக்கும் சண்டையின் நடுவில் அம்பு ஒன்று அவரைத் துளைக்கிறது. உடனே திருமால் மூர்ச்சை போட்டு விழுந்து விடுகிறார்.

உண்மையில் அப்படி அவர் மூர்ச்சைபோட்டு விழவில்லை. எல்லாம் நடிப்பு. இதனை விளங்கிக் கொள்ளாத சத்தியபாமா தனது கணவன் உண்மையிலேயே மூர்ச்சையாகி இறந்து விட்டார் என நினைத்து திருமாலின் வில்லை எடுத்து நரகாசுரன் மீது அம்பு எய்தி அவனைக் கொன்று விடுகிறார்.
உயிர் போகும் தருவாயில் நரகாசுரனிடம் உனது கடைசி ஆசை என்ன? என்று சத்தியபாமா கேட்கிறார். ”எனது மறைந்த நாளை மக்கள் எல்லோரும் கொண்டாட வேண்டும்”" என்கிறான் நரகாசுரன்.‘‘‘‘‘‘‘‘‘‘

இதுவே புராணம் கூறும் கதை


அத்துடன் எகிப்துக்குத் தெற்கே உள்ள கிரெட்டித் தீவை ஆண்ட மைனோஸ் என்ற மன்ன்ன் தனது அரண்மனைப் பாதாளச் சுரங்கத்தில் (முழெள்ளழள) மினோடார் எனப்படும் மனித உடலும், காட்டெருமையின் தலையையும் உடைய அதிசய அரக்கனை அடைத்து வைத்திருந்த்தாகவும், அவனுக்கு பலி கொடுப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் 12 வாலிபர்களை அரசன் பாதாளச் சுரங்கத்தில் உள்ள மினோடர் அரக்கனுக்கு பலிகொடுத்த்தாகவும், ஏதென்ஸ் இளவரசன் தீசியஸ் அரக்கனின் பலியாளனாகச் சென்று, அரக்கனைக் கொன்று மைனோஸ் மன்ன்னுடைய மகளும், இளவரசியுமான ஏரியாடினா என்பவளை மணந்த்தாக கூறப்படுகிநன்ற பழங்கதையை சில வேளைகளில் நீங்கள் படித்திருப்பீர்கள்.


இக்கதையானது உண்மையா என்றும், அரக்கன் என்பவன் இருந்தானா என்றும் ஆராய பிரபலமான புதைபொருள் ஆராய்ச்சி நிபுணர் ஆர்தர் இவான்ஸ் என்பவர். கிரெட்டித் தீவுக்கு சென்று மண்மேடு சூழ்ந்திருந்த அரண்மனையையும், பாதாளச் சுரங்கத்தினையும் கண்டு பிடித்து தோண்டிப் பார்த்தால் அச்சுரங்கத்தில் விசாலமான அறை ஒன்றிருந்த்து என்றும், அவற்றின் கதவு இரும்பினாலானது என்றும், அந்த அறையின் நான்கு சுவர்களிலும் காட்டெருமையின் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்த்து என்றும் தெரிவித்தார். இதுபோல் அவனது அரண்மனைச் சுவர்களிலும் அவ் ஓவியங்களைக் கண்டதாகவும் கூறியிருந்தார். இது அவன் தனது இஷ்ட தேவதையை வணங்கி அத்தெய்வத்திற்கு பலியாக ஆண்டுக்கொரு முறை இளைஞர்களை பாதாளச் சுரங்கத்தில் பலி கொடுத்தான் என்ற முடிவுக்கு வந்த்தாகவும் தெரிவித்த்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.


மேலும் பிரபல கிரேக்க கவிஞர் ஹோமர் எழுதிய கதையிலும் அரக்கன் என்பவன் வெறும் கற்பனையே என கூறியுள்ளார் ஆகவே பார்ப்பணியம் (ஆரியம்) ஹைபர், போலன் கணவாய்களினூடாக இந்தியா வந்த ஆரியர்கள் எம்மூதாதையர்களைக் கொன்றுவிட்டு அதற்கு மத்த்தின் பெயரால் தீபத் திருவிழா வேறு. இவை எல்லாம் தேவைதானா எமக்கு? தன் மண்ணை, தமிழை உயிராக நேசித்த இனத்திற்குந முள்ளிவாய்க்காலில் கொள்ளி வைக்கப்பட்டிருக்கிறது கடந்த வருடம். இந்த நிலையில் என் மூதாதையரை, என் இனத்தை அழித்த ஒரு நிகழ்வை தமிழா நீ கொண்டாடத்தான் வேண்டுமா சற்றுச் சிந்தித்துப்பார்.

வால்மீகி, கம்பன், மட்டுமல்ல நாகரீகம் அடைந்துவிட்ட இந்திய மக்களும், ஏன் ஆரியப்புகழ்பாடி அவர்களின் கால்களை வருடிவிடும் எம் ஈழத்தமிழர்களும் பயன்படுத்தி தம் இனத்தையே இழிவு படுத்துவது வேதனை தருகின்றது. இவர்களின் பின்னால் ஜால்ரா கூட்டங்கள் வேறு!. கேட்டால் தாங்கள் படித்த மேதைகள் என்கின்றனர். தாம் படித்த வரலாறு ரிதியான ஆய்வுகளை மறந்து விட்டு மாயையில் அலைகின்றனர். எப்போது தான் இவர்கள் இம்மாயையிலிருந்து வெளியில் வந்து யாதார்த்த்த்தை சிந்திக்கப் போகின்றனர் எனத்தெரியவில்லை

தமிழ்

யார் தமிழன்?
தீபாவளி தமிழர் விழாவா?


இப்பிரபஞ்சத்தில் நீரில் தோன்றிய உயிரினம் பரிணாம வளர்ச்சிப் படிகளைத் தாண்டி மண்ணில் மனிதனாகத் தடம் பதித்த காலம் முதல் இன்றைய கண்ணி யுகத்திற்கு இடைப்பட்ட மனித நாகரிக வளர்ச்சிப் படிமுறையின் நீண்ட வரலாற்றுப் பக்கங்களில் நம் மூதாதையர்களை அரக்கர்கள், குரங்குகள் எனக் கொன்று குவித்த நிகழ்வுகள் தொடர்கதையாகிவிட்டன.

அந்தவகையில் தான் ஆதியில் தோன்றிய மனிதன் நாகரிக வளர்ச்சியடைந்து வருகின்ற போது அவனது தேவைகள் அதிகமாகத் தொடங்கின அவ்வாறு அதிகமாகின்ற வேளையில் அந்தத் தேவைகளை அவன் வாழும் சூழலில் பூர்த்தி செய்யமுடியாமல் போகவும், காலநிலை இடம் கொடுக்காது போகவும், அவன் தான் இருந்த இடத்தை விட்டு வேறு பிரதேசத்திற்கு அல்லது கண்டங்களுக்கு தொடர்ச்சியாக இடம்பெயரத் தொடங்கினான்.

தென்னிந்தியத் தீபகர்ப்பத்திற்கு புதிய மனிதன் முதலில் ஆபிரிக்காக் கண்டத்திலிந்தே வந்து சேர்ந்தான். இவன் ஆபிரிக்காவை விட்டுப் புறப்பட்ட காலம் இற்றைக்கு 85,000 ஆண்டுகள் முன்பு எனக் கணிக்கப்படுகிறது. இம் மனிதர்களின் இன்றைய வம்சாவழியினர் தென்னிந்தியாவின் நீலகிரி மலைச்சாரலிலும், கிழக்கிந்தியப் பகுதிகளிலும் வாழும் மலைச்சாதி மக்களாவார்கள். இலங்கையில் வாழும் வேடர்களும் இவர்களின் வம்சா வழியினரே. இவர்களைக் குறிக்கும் மரபணுக் குறியீடு M2 ஆகும்.

இதற்குப் பின்னர் இரு பெரிய மனிதப் புலப்பெயர்வுகள் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இன்றைய ஈரான் வழியாக இந்தியாவுக்கு நிகழ்ந்திருக்கின்றது. இது இற்றைக்கு 30,000 ஆண்டுகள் முன்பும், 10.000 ஆண்டுகள் முன்பும் நிகழ்ந்திருக்கின்றது என்பது தொல்மரபியல் மூலம் இன்று நிரூபணமாகின்றது.

இவர்களே இன்றைய திராவிட இனத்தவர்களாவார்கள். இவர்களைக் அடையாளப்படுத்தும் மரபுக் குறியீடு M20 ஆகும்.(Spencer Walls : The Journey of Man (new York) 2002) இதன் பின்னர் இ.மு 4000 – 3500 ஆண்டுக் காலத்தில் இந்தோ – ஆரியர்கள் இந்தியாவை வந்தடைந்தனர். இவர்களைக் குறிக்கும் மரபணுக் குறியீடு M 17 ஆகும்.

ஆகவே இவ்வாறு காலத்துக்குக் காலம் மனிதன் கண்டங்கள் தாண்டிப் புலம் பெயர்ந்தான். அந்த வகையில் தான் எம் ஆதிக்குடிகள் என்று சொல்லக் கூடிய ஒஸ்திரலோயிட் மக்கள் (இவர்கள் பேசிய மொழி முண்டா என அழைக்கப்படுகின்றது. இலங்கை என்பதற்கு முண்டா மொழியில் தான் தீவு என் அர்த்தப்படுகின்றது) ஆபிரிக்காக் கண்டத்திலிருந்து இந்தியா நோக்கி இற்றைக்கு 85,000 ஆண்டுகளுக்கு முன் வருகின்றான்.

இவ்வாறு வந்தவன் இலங்கை வழியாக ஒஸ்திரேலியா நோக்கிச் செல்லுகின்றான். இவ்வாறு சென்றவர்களில் சில கூட்டம் கிட்டத்தட்ட 60,000 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் இலங்கை வழியே வந்து இந்தியாவில் குடி பெயருகின்றனர். இந்த இனத்தின் எச்சங்கள் இன்றும் தமிழகம் நீலகிரி மலையிலும் கிழக்கிந்தியப் பகுதிகளிலும் இலங்கையிலும் வாழும் வேடர்களாவார்கள். இதற்கு தொல்லியல் ஆதாரங்கள் பல இருக்கின்றன.

அவ்வாறு வந்து வாழ்ந்த மனித இனம் (ஒஸ்திரலோயிட்) தாய்வழிச் சமூகத்தைச் சார்ந்தவர்களாகவே இருந்தார்கள். இந்த நேரத்தில் தான் கிட்டத்தட்ட இற்றைக்கு 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் ஹைபர், போலன் கணவாய்களினூடாக இந்தியாவின் விந்திய மலைவரை வந்த ஆரியர். அதற்குத் தெற்கே வாழ்ந்த மக்களை அரக்கர்கள், அசுரர்கள், குரங்குகள் என்று அழைத்தனர்.

இதற்குக் காரணம் அவர்களில் அதிகமானவர்கள் வேடுவர்களாகவும், கூட்டுக் குடும்பங்களாகவும் இருந்த்தாகும். அத்துடன் ஆரியர்களது கலாச்சாரமும், குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மக்களின் கலாச்சாரமும் வித்தியாசமாக இருந்தமையாலேயே அவர்களை அசுரர்கள், குரங்குகள் என்றனர் இதுவே உண்மை. இச்சொல் பின்னர் அவர்களை அரக்கர்கள் என அழைக்கக் காரணமாக அமைந்துவிட்டது.


இவ்வாறு எம் மூதாதையர்களான இவர்களை அரக்கர்கள் எனச்சொல்லி அழித்தனர். அதன்பின்னர் தர்மத்தின் யுத்தம் எனச் சொல்லி கதைபுனைந்தனர். இராமாயணம், மகாபாரதர், போன்ற கதைகள் எல்லாம் இவ்வாறு புனையப்பட்டதே ஆகும். அதே போல்த் தான் தீபாவளித்தினத்தைத் கொண்டாடுவதற்கு காரணமாகச் சொல்லப்பட்ட அரக்கன் நரகாசூரன் அழிப்பு, சூரன் அழிப்பு முதலானவை இவைகள் வெறும் பிராமணியம் கட்டிவிட்ட கதைகளே.

ஏன் தமிழை, தமிழ் மண்ணை ஆழமாக நேசித்த ஒரு இனத்தை உயிராக சுவாசித்த மக்களை பயங்கரவாதிகள் என்ற பெயரில் கடந்தவருடம் முள்ளிவாய்க்காலில் அழித்தமை உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நினைக்கின்றேன்.

இதுபோல்த் தான் 18 ஆம் நூற்றாண்டுகளில் நியுஸ்லாந்தைக் கண்டுபிடித்த பிரித்தானியர் அங்கிருந்த ஒஸ்திரலோயிட் இனத்தை குரங்குகள் என அழித்த வரலாற்றை யாரும் மறக்க மாட்டார்கள். அது ஏன் அமெரிக்கா கண்டத்தைக் கண்டுபிடிக்கச் சென்று எல்சல்வடோர் என்ற தீவில் இறங்கிய கொலம்பஸ் கும்பல் அங்கிருந்த செவ்விந்தியர்களை எப்படிக் கற்பழித்துக் கொன்றனர். ஏன் அமெரிக்காவைக் கண்டுபிடித்த அமெரிக்க வெஸ்புஜி என்ன செய்தான். இதை வரலாறு மறக்காது. அது போலதான் இந்த நரகாசுரன் நாடகமும்.

இனி அரக்கர் இனம் இருந்ததா என நோக்குவோம்.

அப்படி அரக்கர் இனம் இலங்கையில், அல்லது இந்தியாவில் இருந்திருக்குமானால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஈமத்தாழிகளிலும், புதைகுழிகளிலும் அவர்களது உடல்களோ அதற்கான ஆதாரங்களோ கண்டுபிடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஏன் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஏதோ ஒரு யுகத்தில் வாழ்ந்துவிட்டு, இன்று உலகில் அடியோடு வழக்கொழிந்து விட்ட உயிரினங்களின் எலும்புக்கூடுகளோ அல்லது எலும்புகளது பாறைப்படிமங்களோ கிடைத்துவிட்டால் அதன் ஊனத்தை வைத்ந்து பூர்வீகத்தையே கண்டுபிடித்துவிடும் அளவுக்கு இன்றைய நவீன விஞ்ஞானத்தால் முடியும். இன்றைய யுகத்திலும் புலுடா விடுகிறார்கள்.

மீசோ சோயிக் யுகம் (Mesozoic Era) எனப்படும் யுகத்தில் (இந்த மீசோ சோயிக் யுகத்தில் டிரையோசிக், ஜூராசிக், கிரிட்டேசியஸ், என்னும் மூன்று காலங்கள் அடங்கும்.) அதாவது இற்றைக்கு 6.5 கோடிகளுக்கு முன் வாழ்ந்த்தாக கருதப்படும் டைனோசர்களின் எச்சங்கள் கூட கண்டுபிடிக்கப்பட்டு 1842 இல் டைனோசர் என்ற இனம் வாழ்ந்ததாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்கு ஆதாரமாக அமைந்தவை அவற்றின் எலும்புக்கூடுகள் அல்ல எலும்புகள் உக்கிய பாறைப் படிமங்கள் தான்.

அப்படி 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் பூர்வீகத்தையே தெளிவாக்க் கண்டறிய முடியும் என்றால். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த்தாக ஆரியர்களால் கூறப்படும் அரக்கர் இனங்களின் எலும்புகளோ அல்லது எலும்புகள் உக்கிய பாறைப்படை எச்சங்களோ இலங்கையின் எப்பாகத்திலும் கண்டுபிடிக்கப்படாத்து ஏன்? ஆறடிக்கு மேற்பட்ட உயரம் உள்ள மனிதனது எச்சங்கள் கூட இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அரக்கர் என்ற இனமே இலங்கையில் இல்லை.

ஏன் ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் என்ற மனித இனம் உருவானது ஆபிரிக்கா, மற்றும் குமரிக்கண்டத்தில் என்றும், அங்கேயே முதலாவது மனித நாகரீகம் உருவானதாகவும் கூறப்படுகின்றது.

ஆதிகாலத்தில் குமரிக்கண்டத்தில் இருந்து இந்தியா, இலங்கை வரை வாழ்ந்த மக்கள் கருமையான தோல் அமைப்பையும், திடகாத்திடமான உடலமைப்பையும் கொண்டிருந்தனர். இவர்கள் தான் நமது மூதாதையர்களான ஆதித் தமிழ்க்குடிகளே.

~~தீபாவளி தமிழர் விழாவா
~ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


ஆனால் தீபாவளியை ஏன் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள் என்பது விளங்கவில்லை. தீபாவளியைப் பற்றி பல கதைகள் உண்டு. வடநாட்டவரைப் பொறுத்தளவில் (குஜராத்திகள், மார்வாரிகள்) தீபாவளி இலக்குமிக்கு உரிய நாள். அவர்களது புத்தாண்டின் தொடக்க நாள். வணிகர்கள் புதுக் கணக்கை அந்த நாளில்தான் தொடங்குகிறார்கள். வங்காளிகள் தீபாவளியை காளி அல்லது துர்க்கைக்குரிய நாளாகக் கொண்டாடுகிறார்கள். இன்னும் சில இனத்தவருக்கு தீபாவளி நாள் இராமன் வனவாசம் முடித்து அயோத்திக்குத் திரும்பிய நாள்.

தமழர்களைப் பொறுத்தளவில் தீபாவளி நாள் நரகாசுரன் என்ற அசுரன் கொல்லப்பட்ட நாள். இது என்கின்றோம். இதைப் பற்றிய புராணக் கதை என்ன சொல்கிறது?

நரகாசுரன் பூமாதேவியின் பிள்ளை. காமரூப நாட்டின் மன்னன். படைப்புக் கடவுளான பிரமாவை நோக்கி கடும் தவம் செய்து பல வரங்களைப் பெறுகிறான். அதன் பின் தேவர்களை அவன் துன்புறுத்துகிறான். துன்பத்தைப் பொறுக்க முடியாத தேவர்கள் வைகுண்டத்தில் திருமாலிடம் சென்று முறையிடுகிறார்கள். திருமால் வழக்கம் போல் தேவர்களைக் காக்க திருவுள்ளம் கொள்கிறார்
.
ஆனால் நரகாசுரனை கொல்வது திருமாலுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. காரணம் நரகாசுரமன் தனது தாயின் கையால் அல்லாது வேறுயாராலும் கொல்ல முடியாதபடி ஏற்கனவே பிரமாவிடம் வரம் வாங்கி விட்டான். உடனே காத்தல் கடவுளான திருமால் பெரிய சதித் திட்டம் தீட்டுகிறார். தனது தேர்ச்சாரதியாக இரண்டாவது மனைவியான சத்தியபாமாவை (பூமாதேவியின் மறுஅவதாரம்) அமர்த்துகிறார். நரகாசுரனோடு நடக்கும் சண்டையின் நடுவில் அம்பு ஒன்று அவரைத் துளைக்கிறது. உடனே திருமால் மூர்ச்சை போட்டு விழுந்து விடுகிறார்.

உண்மையில் அப்படி அவர் மூர்ச்சைபோட்டு விழவில்லை. எல்லாம் நடிப்பு. இதனை விளங்கிக் கொள்ளாத சத்தியபாமா தனது கணவன் உண்மையிலேயே மூர்ச்சையாகி இறந்து விட்டார் என நினைத்து திருமாலின் வில்லை எடுத்து நரகாசுரன் மீது அம்பு எய்தி அவனைக் கொன்று விடுகிறார்.
உயிர் போகும் தருவாயில் நரகாசுரனிடம் உனது கடைசி ஆசை என்ன? என்று சத்தியபாமா கேட்கிறார். ”எனது மறைந்த நாளை மக்கள் எல்லோரும் கொண்டாட வேண்டும்”" என்கிறான் நரகாசுரன்.‘‘‘‘‘‘‘‘‘‘

இதுவே புராணம் கூறும் கதை


அத்துடன் எகிப்துக்குத் தெற்கே உள்ள கிரெட்டித் தீவை ஆண்ட மைனோஸ் என்ற மன்ன்ன் தனது அரண்மனைப் பாதாளச் சுரங்கத்தில் (முழெள்ளழள) மினோடார் எனப்படும் மனித உடலும், காட்டெருமையின் தலையையும் உடைய அதிசய அரக்கனை அடைத்து வைத்திருந்த்தாகவும், அவனுக்கு பலி கொடுப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் 12 வாலிபர்களை அரசன் பாதாளச் சுரங்கத்தில் உள்ள மினோடர் அரக்கனுக்கு பலிகொடுத்த்தாகவும், ஏதென்ஸ் இளவரசன் தீசியஸ் அரக்கனின் பலியாளனாகச் சென்று, அரக்கனைக் கொன்று மைனோஸ் மன்ன்னுடைய மகளும், இளவரசியுமான ஏரியாடினா என்பவளை மணந்த்தாக கூறப்படுகிநன்ற பழங்கதையை சில வேளைகளில் நீங்கள் படித்திருப்பீர்கள்.


இக்கதையானது உண்மையா என்றும், அரக்கன் என்பவன் இருந்தானா என்றும் ஆராய பிரபலமான புதைபொருள் ஆராய்ச்சி நிபுணர் ஆர்தர் இவான்ஸ் என்பவர். கிரெட்டித் தீவுக்கு சென்று மண்மேடு சூழ்ந்திருந்த அரண்மனையையும், பாதாளச் சுரங்கத்தினையும் கண்டு பிடித்து தோண்டிப் பார்த்தால் அச்சுரங்கத்தில் விசாலமான அறை ஒன்றிருந்த்து என்றும், அவற்றின் கதவு இரும்பினாலானது என்றும், அந்த அறையின் நான்கு சுவர்களிலும் காட்டெருமையின் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்த்து என்றும் தெரிவித்தார். இதுபோல் அவனது அரண்மனைச் சுவர்களிலும் அவ் ஓவியங்களைக் கண்டதாகவும் கூறியிருந்தார். இது அவன் தனது இஷ்ட தேவதையை வணங்கி அத்தெய்வத்திற்கு பலியாக ஆண்டுக்கொரு முறை இளைஞர்களை பாதாளச் சுரங்கத்தில் பலி கொடுத்தான் என்ற முடிவுக்கு வந்த்தாகவும் தெரிவித்த்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.


மேலும் பிரபல கிரேக்க கவிஞர் ஹோமர் எழுதிய கதையிலும் அரக்கன் என்பவன் வெறும் கற்பனையே என கூறியுள்ளார் ஆகவே பார்ப்பணியம் (ஆரியம்) ஹைபர், போலன் கணவாய்களினூடாக இந்தியா வந்த ஆரியர்கள் எம்மூதாதையர்களைக் கொன்றுவிட்டு அதற்கு மத்த்தின் பெயரால் தீபத் திருவிழா வேறு. இவை எல்லாம் தேவைதானா எமக்கு? தன் மண்ணை, தமிழை உயிராக நேசித்த இனத்திற்குந முள்ளிவாய்க்காலில் கொள்ளி வைக்கப்பட்டிருக்கிறது கடந்த வருடம். இந்த நிலையில் என் மூதாதையரை, என் இனத்தை அழித்த ஒரு நிகழ்வை தமிழா நீ கொண்டாடத்தான் வேண்டுமா சற்றுச் சிந்தித்துப்பார்.

வால்மீகி, கம்பன், மட்டுமல்ல நாகரீகம் அடைந்துவிட்ட இந்திய மக்களும், ஏன் ஆரியப்புகழ்பாடி அவர்களின் கால்களை வருடிவிடும் எம் ஈழத்தமிழர்களும் பயன்படுத்தி தம் இனத்தையே இழிவு படுத்துவது வேதனை தருகின்றது. இவர்களின் பின்னால் ஜால்ரா கூட்டங்கள் வேறு!. கேட்டால் தாங்கள் படித்த மேதைகள் என்கின்றனர். தாம் படித்த வரலாறு ரிதியான ஆய்வுகளை மறந்து விட்டு மாயையில் அலைகின்றனர். எப்போது தான் இவர்கள் இம்மாயையிலிருந்து வெளியில் வந்து யாதார்த்த்த்தை சிந்திக்கப் போகின்றனர் எனத்தெரியவில்லை